Thursday 17 March 2016

[01] இறைமறையில் அறிவியல் அற்புதங்கள்

அன்புள்ள வாசகர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
“இறைமறையில் அறிவியல் அற்புதங்கள்” என்ற தொடரின் மூலம், பல ஆண்டுகள் ஆய்வு செய்து, பல நூறு அறிவியல் அறிஞர்களின் கடுமையான உழைப்பிற்கு பின் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளை 15 நூற்றாண்டுகளுக்கு முன்பு, அறிவியல் வாடையைக்கூட அறிந்திராத மக்களுக்கு முன்பு மிக எளிமையாக இறைவன் குர்ஆனில் கூறியிருக்கும் அறிவியல் அதிசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முன்வந்திருக்கிறேன்.
இறைவன் கூறியிருக்கும் விதம் அறிவியல் அறியாத மக்களும், அறிவியலின் உச்சானியில் இருக்கும் மக்களும் மிக எளிமையாக புரிந்து கொள்ளும் அமைப்பில் இருப்பது அதன் அதிசயங்களில் பேரதிசயமாகும். எந்த காலத்தில் வாழ்ந்த மக்களும் அவர்கள் புரிந்து கொண்ட அறிவியல் உண்மைகளுக்கு எதிராக குர்ஆனின் வசனங்கள் ஒரு போதும் இருந்ததில்லை, இனிமேலும் அவ்வாறு இருக்கப்போவதுமில்லை.
வெவ்வேறு காலங்களில் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளை அந்தந்த காலத்தில் வாழ்ந்த அறிவியல் அறிஞர்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் குர்ஆன் வசனங்கள் அமைந்திருப்பது அதன் தனிச்சிறப்பாகும்.
ஒரு காலத்தில் கண்டு பிடிக்கப்பட்ட அறிவியல் உண்மைகள் தவறு என நிரூபணம் செய்யப்படும் போது, குர்ஆன் சொன்ன கருத்து தவறு என்று ஆகாது, மாறாக அவர்கள் திருகுர்ஆனை விளங்கிக் கொண்ட விதம், குர்ஆனின் வசனத்திற்கு அவர்கள் கொடுத்த பொருள்தான் தவறு என்றாகும்.
தற்போது கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் உண்மையின் படியே இறைவசனம் பொருள் தருகிறது என்று ஒவ்வொரு காலத்து மக்களையும் நம்ப வைப்பதும், எல்லா காலத்து அறிவியல் அறிஞர்கள் கூறும் கருத்துடன் நூற்றுக்கு நூறு பொருந்தி வருகிறது என்று சொல்ல வைப்பதும் அதன் அழியாத அற்புதங்களில் உள்ளதாகும். இந்த அற்புதம் குர்ஆனுக்கு மட்டுமே சொந்தமானதாகும்.
வேத நூற்களில் அறிவியல் ஆராய்ச்சி செய்ய தூண்டும் ஒரே வேதம் குர்ஆன் மட்டும் தான் என ஆணித்தரமாக என்னால் சொல்லமுடியும். மற்ற வேதங்கள் அவ்வாறு தூண்டவில்லை என்பதைவிட அறிவியல் உண்மைக்கு எதிராக நிற்கிறது, அறிவியல் பேசுபவர்களை குழப்பவாதிகள், மாபெரும் குற்றவாளிகள் என முத்திரை குத்தி மரண தண்டனை விதிக்கப்பட்ட வரலாறுகளைத்தான் நம்மால் படிக்க முடிகிறது.
மற்ற வேதங்கள் இறைவனால் அருளப்பட்ட நிலையிலிருந்து மாறி, பல மாற்றங்களுக்கு உட்படுத்தப் பட்டுவிட்டதால், பல அறிவியல் உண்மைகளுக்கு எதிராக இயற்கையாகவே அவைகள் அமைந்துவிட்டன. மத குருமார்களின் ஆதிக்கம் வலுவாக இருந்த போது, அறிவியல் பேசுவோர்கள் சமூக விரோதிகளாக, இறைக்குற்றம் செய்து விட்டவர்களாக கருதப்பட்டு, சிறையிலடைத்து சித்திரவதை செய்யப்பட்டு வந்தார்கள், தங்களது கருத்துகளிலிருந்து பின் வாங்கியவர்களுக்கு உயிர்பிச்சை அளிக்கப்பட்டது, தான் கண்டுபிடித்த அறிவியல் உண்மையிலிருந்து பின்வாங்கதவர்கள் மரண தண்டனை விதிக்கப்பட்டு கொல்லப் பட்டார்கள். இந்த கொடுமை மதத்தின் பெயரால், வேதத்தின் பெயரால் அரங்கேற்றம் செய்யப்பட்டது என்பதுதான் அதிலும் கொடுமையாக இருந்தது.
இந்தக் கொடூரம் வேதங்களின் பெயரால், அரங்கேற்றம் செய்யப்பட்டு கொண்டிருந்த காரணத்தால் பல அறிவியல் விஞ்ஞானிகள், “இறைவன் இல்லை”, “வேதம் பிற்போக்கான கருத்துடையது” என்ற முடிவுக்கு வர வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானார்கள்.
ஆனால் எந்த வேத நூலுக்கும் இல்லாத ஒரு தனி சிறப்பு இந்த குர்ஆனுக்கு இருப்பதால்தான், மேலும் அறிவியல் உலகைப் படைத்த அல்லாஹ்வால் அருளப்பட்ட வேதமாகவும் இருப்பதால்தான் இன்று அறிவியல் உலகிற்குகூட அதனால் சவால் விட்டு, நிமிர்ந்து நிற்க முடிகிறது. குர்ஆனை போல இலக்கிய சுவையும், கருத்தாழமும், அறிவியல் உண்மைகளை எளிமையாக எடுத்து வைக்கும் அதன் சிறப்பு பொருந்திய ஒரு வசனத்தையாவது இந்த உலக மக்களால் கொண்டு வர முடியுமா? என அது எடுத்து வைக்கும் சவாலை 15 நூற்றாண்டுகளாக யாராலும் எதிர்கொள்ள முடியவில்லையே, இனிமேலும் அதனை எதிர்கொள்ள முடியாது என்பது இரண்டு கருத்துக்கு இடமில்லாத உண்மையாகும்.
வானவியல், புவியியல் என எத்தனை இயல்கள் இருக்கின்றனவோ அத்தனை இயல்களையும் ஆராய்ச்சி செய்து அல்லாஹ்வின் அற்புத ஆற்றலை புரிந்து கொள்ள தூண்டுகிற ஒரே வேதம் குர்ஆன் மட்டுமே.
இந்த தொடரை உங்கள் முன் வைப்பதில் பெருமிதம் அடைகிறேன். நான் ஒரு மருத்துவன் என்ற முறையில் இன்றைய நவீன மருத்துவ அறிவியல்களை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு பெற்றுள்ளேன். இந்த அறிவியல் உண்மைகளை 15 நூற்றாண்டுகளுக்கு முன்பே குர்ஆன் மூலம் இந்த உலகிற்கு மிக எளிமையான முறையில் உணர்த்தப்பட்டு விட்டது என்பதை விளக்குவதே எனது நோக்கம்.
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலம், ஒவ்வொரு துறை குறித்தும் தெளிவான, தீர்க்கமான தகவல்களை தந்து கொண்டிருக்கும் அறிவியல் நுட்பம் நிறைந்த காலம். மதத்தின் பெயரால் மூட நம்பிக்கைகளை வளர்ப்பது கடினம், எந்த தகவலையும் அறிவியல் தகவலோடு ஒப்பீடு செய்து பார்த்து ஏற்றுக் கொள்ளும் காலம் இது. மருத்துவ துறையில் இன்று புதிதாக கண்டு பிடிக்கப்பட்ட உண்மைகள் குர்ஆனில் எந்தந்த வசனங்களில் இடம் பெற்றுள்ளது என்று வாசகர்களுக்கு இனம் காட்டுவதே எனது முக்கிய நோக்கம். அதன் மூலம் குர்ஆன் இறைவேதம் என்பதை எளிதாக புரிந்து கொள்ள மிக வசதியாக இருக்கும்.
அல்லாஹ் எனது நல்ல நோக்கத்திற்கு வெற்றியை தருவானாக. எனக்கு இப்படி ஒரு சேவை செய்வதற்கு வாய்பளித்த இறைவனுக்கு நன்றி கூறி, எனது இந்த சேவையினை அங்கீகரித்து கொள்ள பிரார்த்தனையும் செய்து கொள்கிறேன்.
கருயியல்
கருயியல் என்பது மனிதன் கருவுற்று அவன் எவ்வாறு தாயின் வயிற்றில் வளர்ச்சி அடைந்து, முழு மனித வடிவம் பெற்று பிறக்கிறான் என்ற தகவலை ஆய்வு செய்யும் ஒரு துறையாகும். ஒரு பெண் கருவுற்ற நாள் முதல், அவளது வயிற்றில் குழந்தை எந்தந்த நிலையில் எவ்வாறு வளர்ச்சி அடைகிறது என்பது பற்றிய அறிவு சிறிய அளவுகூட இல்லாத காலகட்டத்தில் குர்ஆனில் மிக தெளிவாக, அதே நேரத்தில் மிக எளிமையாக கருவளர்ச்சியின் எல்லா விவரங்களையும் கூறப்பட்டிருப்பது அறிவியல் அறிஞர்களை வியப்பில் ஆழ்த்துகிறது.
இறைபணிக்காக இணைந்து நிற்கும் எனதருமை இஸ்லாமிய சகோதரர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
பதினான்கு நூண்றாண்டுகளுக்கு முன் எல்லாம் வல்ல இறைவனால் நமது நபிக்கு ஜிப்பரயீல்(அலை) மூலமாக அருளப்பட்ட இத்தன்னிகரற்ற மாமறையில் தெரிவித்துள்ள வாழ்க்கை நெறிகளும், அறிவியல் உண்மைகளும் இறைச்சட்டங்களும் இனி எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் காலத்துக்கேற்ப பொருந்தி நிறைந்து நிற்பவை என்பது சத்தியம்.
இவ்வரிய திருமறை வருடம் ஒரு முறையும், நமது நபி(ஸல்) அவர்களின் இறுதியாண்டு வாழ்க்கையில் இரு முறையும் ஜிப்பரயீல்(அலை) அவர்களின் மூலம் சரிபார்க்கப்பட்டும், ஆயிரமாயிரம் சத்திய சஹாபாக்களால் மனனம் செய்யப்பட்டும், பிரதிகள் எடுக்கப்பட்டும் இன்றுவரை ஒரு எழுத்துக்கூட மாற்றம் செய்யப்படாமல் இறையருளால் பாதுகாக்கப்பட்டு, இத்திருமறை “இறைவசனமே” என உலகிற்கு தெளிவாக்கி கொண்டிருக்கிறது.
அறிஞர்களும், விஞ்ஞானிகளும், பல்துறை வல்லுனர்களும் நம் திருமறையில் புதைந்துகிடக்கும், காலத்துக்கேற்ப பொருந்தி நிற்கும், உண்மைகளை கண்டு வியந்து நிற்கின்ற வேளையில், ஒரு சில அறிவிலிகள், 1400 ஆண்டுகள் பழமைவாய்ந்த, ஒரு படிப்பறிவில்லாத நபரின் வாக்குகள் இந்த நூற்றாண்டுக்கு ஏற்றதல்ல என வீராப்பு பேசி எதிர்த்து சேறு பூச விழைகின்றனர்.
அன்பு சகோதரர்களே!, இவ்வெதிர்ப்புக்கள் நமக்கு புதிதல்ல. இஸ்லாம் என்கின்ற வாழ்க்கைநெறி இப்பூலோகத்தில் வேரூன்றி உயர்ந்து நிற்க அது கொடுத்த விலையான தியாகங்களும், உயிர்களும் உலகில் தோன்றிய எந்த ஒரு மதத்திற்கும் ஏற்பட்டதல்ல. இந்த உலகம், நமக்கு உரியதான அடுத்த நிரந்தர உலகத்திற்கு நம்மை தயார்படுத்திக் கொள்ளும் ஒரு பயிற்சி களமே, (நபி மொழி) என்ற சிந்தனையுடன் இச்சத்திய நெறிகளை வேரூன்ற தம் இன்னுயிரையும், உடமைகளையும் நீத்த ஆயிரமாயிரம் நபித்தோழர்களையும், இஸ்லாமிய உடன் பிறப்புகளையும் மனதில் நினைத்து இறைவனிடம் அவர்கள் நிரந்தர வாழ்க்கைக்கு இறைஞ்சி நமது இறைப்பணியை இனிதே தொடர்வோம்.
இச்சிறிய முன்னுரையோடு, இதழ்கள்தோறும் இறைமறையில் புதைந்து கிடக்கும் அறிவியல் உண்மைகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். ஆலோசனைகளும் கருத்துகளும் கேள்விகளும் வரவேற்கப்படுகின்றன.
இந்த வரிசையில், மனிதன் எவ்வாறு உருவாக்கப்படுகிறான் என்பதை, இறைமறை விளக்குவதை பார்ப்போம்.
நிச்சயமாக (முதல்) மனிதனைக் களிமண்ணின் மூலச்சத்திலிருந்து படைத்தோம். பின்னர் (அதற்கென உள்ள) ஒரு பாதுகாப்பான இடத்தில் (கர்ப்பப்பையில்) நாமே அவனை இந்திரியத்துளியாக ஆக்கினோம். பின்னர் அதை அலக் என்ற நிலைக்கு மாற்றினோம். பின்னர் ‘அலக்’ என்பதை சதைத்துண்டாக ஆக்கினோம். சதைதுண்டை எலும்பாக ஆக்கி, எலும்புக்கு மாமிசத்தை அணிவித்தோம். பின்னர் வேறு படைப்பாக (முழு மனிதனாக) உருவாக்கினோம். ஆகவே படைப்பாளர்களில் அழகானவனான அல்லாஹ் உயர்ந்தவனாக ஆகிவிட்டான். அல் குர்ஆன் 23:12-14
சகோதரர்களே! மனித கருவளர்ச்சியியலை இவ்வளவு துல்லியமாக வெவ்வேறு நிலைகளில் அதன் உருமாற்றம், கால அளவு, குணாதிசயங்களை படைப்பாளனால் மட்டுமே தெளிவாக்க இயலும்.
நான் கருவளர்ச்சியியலில் ஆழமாக செல்லாமல் இவ்வசனத்தின் சிறப்பை மட்டும் தெளிவாக்குகிறேன். “அந்த இந்திரியத்துளியை கர்பப்பையில் ஒரு பாதுகாப்பான நிலையில் வைத்தோம்” அதாவது, கர்பப்பையின் அமைப்பு, அதன் தசைத்தன்மை, சிறப்பு இரத்த ஓட்ட அமைப்பு அதன் திசுவுடைய குணங்கள் எல்லாம் அதற்கே (குழந்தை வளர்ச்சிக்கே) உரித்தானவை. இச்சிறப்பு அமைப்பு இது போன்ற வேறு எந்த உறுப்புகளுக்கும் இல்லை. செயற்கை முறையில் கருத்தரித்தல் செய்தாலும் அதை (கருவை) பின்னர் இக் கருப்பையில்தான் வைத்து வளர்க்க முடியும். மேலும் “பாதுகாப்பான நிலையில்” வைத்தோம் என்கிறான். அதாவது இக்கருவை கர்ப்பபையின் “உடம்பு” என்ற பகுதி அல்லாது வேறு எந்த பகுதியில் வைத்தாலும் (கருவை) கரு முழு வளர்ச்சி அடைவதில்லை. (Abort) அபார்ட் ஆகிவிடும். எனவேதான் இறைவன் “பாதுகாப்பான இடத்தில்” (உடம்பு பகுதியில்) வைத்ததாக கூறுகிறான்.
இந்த வசனங்களை உன்னிப்பாக கவனிக்கும் போது இறைவன் கர்ப்பப்பையை பொதுவாக குறிப்பிடும் போது “ரஹ்ம்” என்று தான் இறைமறையில் பல இடங்களில் குறிப்பிடுகிறான்.
அடுத்து விந்து துளியை “அலக்” என்ற நிலைக்கு மாற்றினோம் என்று வருகிறது.
“அலக்” என்ற அரபி வார்த்தைக்கு
1. அட்டை,
2. தொங்கிக் கொண்டிருக்கும் ஒரு பொருள்,
3. இரத்தக்கட்டி என்ற பொருள்கள் உண்டு.
அட்டையையும், “கரு”வையும் ஒப்பிட்டு பார்க்கும் போது சில ஒற்றுமைகள் உண்டு.
1. இந்த இரண்டின் ஒருமித்த தோற்றம்.
2. அட்டை மற்றவர்களின் இரத்ததைத் உணவாகக் கொள்கிறது. கருவும் தாயின் இரத்ததைத்தான் உணவாக்குகிறது.
அடுத்து தொங்கிக்கொண்டிருக்கும் பொருள் என்பது தாயின் கர்ப்பப்பையில் ஒட்டிக் கொண்டிருக்கம் குழந்தை கருக்கு மிக்க பொருத்தமான பொருள்தானே!.
இரத்தக்கட்டி என்ற பொருளும் மிகச்சரியானதே. எவ்வாறு எனில் “கரு” உருவான முதல் மூன்று வாரங்களும் இரத்தக்கட்டி போன்றுதான் இருக்கும். (இரத்த ஓட்டம் இருக்காது. சுப்ஹானல்லாஹ்! இறைவன் அந்த “அலக்” என்ற வார்த்தையில் கருவின் இயல்புகள், குணங்கள், வளர்ச்சிநிலை போன்றவற்றை வியக்கும் படி தெரிவித்துள்ளான்.

வார்த்தை ஒழுக்கங்கள்

தலைப்பு: வார்த்தை ஒழுக்கங்கள்
வழங்குபவர்: முஜாஹித் இப்னு ரஸீன்


Download mp3 audio

Monday 14 March 2016

அல்குர்ஆன் விளக்கம் – மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை

இம்மார்க்கத்(தைத் தழுவுவ)தில் எவ்வித நிர்ப்பந்தமும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி மிகத் தெளிவாகிவிட்டது. எவர் (அல்லாஹ் அல்லாது வணங்கப்படும்) ‘தாகூத்’தை நிராகரித்து, அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கின்றாரோ அவர் நிச்சயமாக அறுந்துபோகாத பலமான கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டவராவார். மேலும், அல்லாஹ் யாவற்றையும் செவியுறுபவனும் நன்கறிந்தவனுமாவான். ‘ (2:256)
‘லா இக்ராஹ பித்தீன்’ மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை என இந்த வசனம் கூறுகின்றது. இஸ்லாத்தை ஏற்க வேண்டும் என யாரும் நிர்ப்பந்தம் செய்யக் கூடாது என்பதே இதன் அர்த்தமாகும். இஸ்லாத்தை ஏற்றவர் தொழுமாறு கட்டாயப்படுத்தப்படுவார். ஸகாத் கொடுக்குமாறு கட்டாயப்படுத்தப்படுவார். இஸ்லாமிய கடமைகளைப் பேணுமாறும், அதன் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்படுமாறும் வலியுறுத்தப்படுவார். ஆனால், முஸ்லிம் அல்லாத ஒருவரை இஸ்லாத்தை ஏற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த மார்க்கத்தில் அனுமதி இல்லை. பிறரை இஸ்லாத்தை ஏற்குமாறு கட்டாயப் படுத்துவதை இஸ்லாம் தடுத்துள்ளது.
‘உங்களுக்கு உங்கள் மார்க்கம்; எனக்கு எனது மார்க்கம்.’ (109:6)
உங்களுக்கு உங்கள் மார்க்கம், எமக்கு எமது மார்க்கம் என்பது இஸ்லாத்தின் சுலோகமாகும்.
‘லனா அஃமாலுனா வலகும் அஃமாலுகும்:’
‘எங்கள் செயற்பாடுகள் எமக்கு, உங்கள் செயற்பாடுகள் உங்களுக்கு!’ (28:55, 42:15) என்பதும் இஸ்லாத்தின் அடிப்படையாகும். யாரும் தமது சட்டத்தை அடுத்தவர் மீது திணிக்கக் கூடாது என இந்த வசனம் கூறுகின்றது.
‘சத்தியம் உங்களது இரட்சகனிடமிருந்து உள்ளதே! எனவே, விரும்பியவர் நம்பிக்கை கொள்ளட்டும். விரும்பியவர் நிராகரிக்கட்டும் என்று கூறுவீராக! அநியாயக்காரர்களுக்கு நிச்சயமாக நாம் நரகத்தைத் தயார் செய்து வைத்துள்ளோம். அதன் சுவர்கள் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். அவர்கள் (தண்ணீர் கேட்டு) உதவி தேடினால் முகங்களைப் பொசுக்கி விடும் உருக்கப்பட்ட செம்பைப் போன்ற சூடான நீர் அவர்களுக்கு வழங்கப்படும். பானத்தில் அது மிகக் கெட்டது. மேலும், அது மிகக்கெட்ட வசிப்பிடமாகும்.’ (18:29)
விரும்பியவர் ஏற்கலாம், விரும்பியவர் மறுக்கலாம். ஆனால், சத்தியத்தை மறுத்தவர்கள் மறுமைப் பேற்றைப் பெற முடியாது என்பதே இஸ்லாத்தின் போதனையாகும். இந்த அடிப்படையிலும் இஸ்லாத்தைப் போதிக்கலாம். யாரையும் நிர்ப்பந்திக்கக் கூடாது என்பது இஸ்லாத்தின் கோட்பாடாகும்.
இஸ்லாத்தை ஏற்குமாறு யாரையும் நிர்ப்பந்திக்க வேண்டியதில்லை என்பதற்கு இஸ்லாம் அழகான காரணத்தையும் கூறுகின்றது.
வழிகேட்டில் இருந்து நேர்வழி தெளிவாகிவிட்டது. சாதாரண அறிவுள்ளவனும் சிந்தித்தால் இஸ்லாம் சொல்லும் கருத்துத்தான் உண்மை என்பதை உணர்ந்து கொள்வான். இஸ்லாம் சத்தியமானது என்பதால் அதை ஏற்குமாறு நிர்ப்பந்திக்க வேண்டியதில்லை. சிந்தனை உள்ளவன் உண்மையைத் தானாகவே ஏற்றுக் கொள்வான்.
சிலை வணக்கம் அறிவீனமானது. பலதெய்வ நம்பிக்கை மூடத்தனமானது. ஜாதி வேறுபாடு என்பது பகுத்தறிவுக்கும், மனித நேயத்திற்கும் முரணானது என்பதையெல்லாம் தெளிவாக உணர்ந்த பின்னும் அவற்றைத் தேர்ந்தெடுப்பவனை நிர்ப்பந்தப்படுத்தி அவற்றை விட வைப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. இஸ்லாத்தில் உளத்தூய்மை என்பது முக்கியமான தாகும். நிர்ப்பந்தத்திற்காக ஒருவன் இஸ்லாத்தை ஏற்பதால் எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை. எனவே, இஸ்லாம் நிர்ப்பந்த மதமாற்றத்தை அனுமதிக்கவில்லை.
இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்ற தவறான செய்தி பரப்பப்பட்டுள்ளது. இஸ்லாத்தைப் பாதுகாக்க வாள் பயன்படுத்தப் பட்டுள்ளது. அதைப் பரப்புவதற்கு வாள் பயன் படுத்தப்பட்டதில்லை. அப்படிப் பயன்படுத்தவும் கூடாது! இன்று உலகில் இஸ்லாம் வெகு வேகமாகப் பரவி வருகின்றது. வாள்தான் அதற்குக் காரணமா? முஸ்லிம்கள் பல நூற்றாண்டு களாக ஆட்சி செய்து வந்தனர். வாள் பயன் படுத்தப்பட்டிருந்தால் அங்கு வேறு மதங்கள் வளர்ந்திருக்க முடியுமா? போர்களே நடக்காத இந்தோனேசியா பகுதிகளில்தான் முஸ்லிம்கள் அதிகமாக உள்ளனர். இஸ்லாத்தின் வளர்ச்சி மீது காழ்ப்புணர்வு கொண்டவர்களின் கட்டுக் கதையே இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்ற கூற்றாகும். இஸ்லாம் இந்த சிந்தனைக்கே எதிரானது என்பதை இந்த வசனத்தின் மூலம் உறுதியாக அறியலாம்.

Saturday 12 March 2016

நம்மை படைத்தவன் யார்? எப்படி நம்ப வேண்டும்?


மாற்று மதத்தினருக்கு இஸ்லாத்தினை எவ்வாறு அறிமுகம் செய்ய வேண்டும் என்பதற்கு சில குறிப்புகளை வழங்குகின்றார் ஆசிரியர். முஜாஹித் இப்னு ரஸீன் அவர்கள். மாற்று மதத்தினருக்கு இஸ்லாத்தினை அறிமுகம் செய்யும் பணியில் இருக்கும் சகோதரார்களுக்கு பயனளிக்கும் என்று நம்புகின்றோம். தர்க்கவியியல் முறையில் இஸ்லாத்தினை நிறுவதா? குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் விளங்க வைப்பதா?

Friday 11 March 2016

அநாதைகள் மூலம் சுவனம்

ஒரு குடும்பம் சிறந்த முறையில் முன்னேறுவதற்கு கணவனுடைய பங்களிப்பு மிக முக்கியமானதாக அமைகிறது. அதே நேரம் கணவன் இறந்து விட்டால், அந்த குடும்பத்தின் நிலை கேள்விக்குறியாக மாறிவிடுகிறது?
ஒரு கணவன் இறந்த பிறகு அந்த குடும்பத்திற்கு இரண்டு பெயர்கள் வந்து விடும் ஒன்று மனைவியை விதவை என்றும், பிள்ளைகளை அநாதைகள், என்றும் அழைப்பார்கள். இது விரும்பியோ, விரும்பாமலோ,உலகில் நடந்து வருகின்றது.
கணவன் இருக்கும் வரையில் உறுதியாக இருந்தவள் கணவனை இழந்த பின் தானாக மனபாதிப்புக்கு ஆழாகி விடுகிறாள். அப்போது கணவனின் நுாறு வீதமான பங்களிப்பின் உண்மையை உணர்கிறாள். என் பிள்ளைகளை நான் எப்படி வளர்க்கப் போகிறேன், எனக்கு பாதுகாப்பு யார் ? போன்ற சிந்தனைகளால் மனஉளைச்சல்களுக்கு ஆளாகின்றாள்.
நாட்கள் செல்லச் செல்ல அந்த பிள்ளைகள் மட்டுமல்ல அந்த குடும்பமே அநாதையாகி விடும் அவல நிலையை காண்கிறோம். அந்த தாயின் சிரமத்தையும், பிள்ளைகளின் ஏக்கத்தையும் போக்கும் வண்ணமாக அந்த குடும்பத்திற்கு உதவிக் கரம் நீட்டுங்கள், அந்த அநாதைப் பிள்ளைகளுக்கு தாராளமாக வாரி வழங்குங்கள், உங்களது பிள்ளைகளைப் போல அன்பாக அணைத்துக் கொள்ளுங்கள், நீங்கள் அவர்களுக்கு செய்கின்ற உதவிகளுக்கு பகரமாக அல்லாஹ் இந்த உலகத்தில் உங்களை கண்ணியப் படுத்துவதோடு,மறுமையில் சுவனத்தை தருவதற்கு தயாராக உள்ளதாக இஸ்லாம் நமக்கு ஆர்வமூட்டுகிறது.
நபி (ஸல்) அவர்கள் அநாதையாக வளர்ந்து வரும் போது,அவர்களை வளர்த்தவர்களுக்கு அல்லாஹ் செய்த அருள் வளங்களை முதலில் பார்த்து விட்டு, பொதுவாக அநாதைகளின் முக்கியத்துவத்தைப் பற்றி தெடர்ந்து பார்ப்போம்.
நபி (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்னரே தந்தை அப்துல்லாஹ் மரணித்து விட்டார்கள். நபியவர்கள் பிறந்து சிறிது காலத்தில் தாய் ஆமினாவும் மரணித்து விட்டார்கள்.
அன்றைய காலத்தில் பிற குழந்தைகளுக்கு வாடகைக்காக பால் ஊட்டுவது வழக்கம். அந்த அடிப்படையில் நபியவர்களுக்கு அபூ லஹபின் அடிமையான ”ஸூவைபிய்யா என்ற தாயிடம் நபியவர்கள் பால் குடித்தார்கள். மேலும் ஹலீமா அவர்களிடமும் பால் குடித்தார்கள். ஹலீமா அவர்கள் ஆரம்பத்தில் நபியவர்களை பால் ஊட்ட எடுப்பதற்கு பின் வங்கினார்கள். ஏன் என்றால் தந்தை இருந்தால் தான் அதற்கான ஊழியம் கிடைக்கும். ஆனால் நபியவர்களுக்கோ தந்தை இல்லை எனவே பால் கொடுத்தால் ஊழியம் யாரிடம் பெறுவது என்ற பிரச்சினையால் ஆரம்பத்தில் நபியவர்களுக்கு பால் கொடுப்பதற்கு எவரும் முன்வரவில்லை. என்றாலும் வேறு குழந்தைகள் கிடைக்காததினால் இறுதியில் நபியவர்களையே ஹலீமா அவர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள்.
நபியவர்களின் சிறப்பால் ஹலீமா அவர்களது ஒட்டகம் தாராளமாக பால் கொடுக்க ஆரம்பித்தது. அவர்கள் பயணம் செய்யும் கழுதை வேகமாக பயணிக்க ஆரம்பித்தது. ஹலீமா அவர்களது மார்பில் தாராளமாக பால் சுரக்க ஆரம்பித்தது. அவர்களது குடும்பத்திற்கு அல்லாஹ்வின் அருள் வளம் வர ஆரம்பித்து. ஹலீமாவே! நீ அதிகமான பரகத்துள்ள குழந்தையை பெற்றுள்ளாய் என்று ஹலீமாவின் கணவர் கூறினார்.
இது அநாதைக் குழந்தையின் மூலம் அக்குடும்பத்திற்கு அல்லாஹ்வால் கொடுக்கப் படு்ம் எதிர் பாராத அருள் வளமாகும்.
அநாதைகளை பராமறிப்பதன் சிறப்புகள்
”அல்லாஹ்வின் மீது அன்பின் காரணமாக ஏழைகளுக்கும், அநாதைகளுக்கும், கைதிகளுக்கும் அவர்கள் உணவளிப்பார்கள். மேலும் நாம் உங்களுக்கு உணவளிப்பது எல்லாம் அல்லாஹ்வின் பொருத்தத்திற்காகவே தவிர, உங்களிடமிருந்து எந்த பிரதி பலனையோ, அல்லது நன்றியையோ,எதிர்ப் பார்த்து அல்ல (76- 08)
எதை செய்வதாக இருந்தாலும் அல்லாஹ்விற்காக மட்டும் தான் செய்ய வேண்டும். பிறர் என்னை பாராட்ட வேண்டும், புகழ வேணடும், என்னை பெருமையாக நினைக்க வேண்டும் என்ற சிந்தனை எவருக்கும் வந்து விடக்கூடாது.
மேலும் ” நீங்கள் அநாதைகளை கண்ணியப் படுத்துவதும் கிடையாது” (89- 17)
அநாதைகளை நாம் கண்ணியப் படுத்த வேண்டும் என்பதை மேற்ச் சென்ற வசனம் நமக்கு ஆர்வமூட்டுகிறது. எனவே அநாதைகள் விடயத்தில் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும்.
மேலும் ” நபியே ! நீர் கவனித்தீரா ? நியாயத் தீர்ப்பு நாளை பொய்ப்பிப்பவன் தான் அநாதைகளை விரட்டுவான். (107 -01 )
அநாதைகளை புறக்கணிக்கக் கூடாது, அப்படி புறக்கணிப்பவன் தான் பொய்யன் என்பதை மேற்ச் சென்ற குர்ஆன் வசனம் எச்சரிக்கிறது்
மேலும் …”அநாதைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள், அவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்வது நலவாகும். என்று நபியே ! கூறிவிடுங்கள் மேலும் அவர்களுடன் நீங்கள் கலந்து இருந்தால் அவர்கள் உங்கள் சகோதரர்களாவர்…(2- 220)
இந்த வசனம் இரண்டு முக்கியமான விசயங்களை எடுத்துக் காட்டுகிறது. முதலாவது அநாதைகளுடன் எந்த பாகுபாடின்றி நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும். என்பதாகவும், இரண்டாவது அவர்கள் யாரும் அற்ற அநாதைகள் என்று ஒதுக்கி விடாமல் நமது சகோதரர்களைப் போல இரண்டரக் கலந்து இருக்க வேண்டும், என்பதையும் மேற்ச் சென்ற குர்ஆன் வசனம் நமக்கு நினைவு படுத்துகிறது.

அநாதைகளுக்கு அநியாயம் செய்யாதீர்கள்

எவர் அநாதைகளுக்கு ஆதரவு கொடுக்காமல், அநியாயம் செய்கிறாரோ அவர் இந்த உலகில் இழிவு படுத்தப்படுவதோடு, மறுமை நாளில் கடுமையான முறையில் வேதனைப் படுத்தப்படுவார்.
” எவர் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக சாப்பிடுகிறாரோ அவர் வயிறுகளில் நெருப்பைத்தான் சாப்பிடுகிறார். மேலும் அவர் நரகத்தில் நுழைவிக்கப் படுவார். (4- 10)
மேலும் ” நீங்கள் அநாதைகளின் சொத்துக்களை ( பருவ வயதை அடைந்த பின் குறைவின்றி ) கொடுத்து விடுங்கள், ( அதிலுள்ள ) நல்லவற்றிக்கு பகரமாக கெட்டதை மாற்றி விடாதீர்கள். அவர்களுடைய பொருட்களை உங்களுடைய பொருட்களுடன் சேர்த்து சாப்பிட்டு விடாதீர்கள். நிச்சயமாக அது பெரும் பாவமாகும். ( 04 -02 )
அநாதை பிள்ளைகளை வளர்த்து வரும் போது அவர்களுக்கு சொத்துகள் இருந்தால், அவர்கள் விபரமான பருவத்தை அடைந்த பின் அந்த சொத்துக்களை சரியாக கொடுத்து விட வேண்டும். தட்டிக் கேட்க யாருமில்லை என்பதற்காக அவர்களுடைய பொருட்களை அநியாயமாக எடுத்து விடக் கூடாது.
மேலும் அநாதைகளை பராமறிப்போர் ஏழைகளாக இருந்தால் நியாயமான முறையில் தேவையான அளவு எடுத்துக் கொள்ள அல்லாஹ் அனுமதிக்கிறான். அதை பின் வரும் வசனம் தெளிவுப் படுத்துகின்றன.
… ”அநாதையை பராமறிப்பவர் செல்வந்தராக இருந்தால் ( அநாதையின் சொத்துகளை சாப்பிடும் விடயத்தில் ) தவிர்த்துக் கொள்ளுங்கள், ஏழைகளாக இருந்தால் நியாயமான அளவு புசிக்கலாம். அநாதைகளின் பொருட்கள் அவர்களிடம் ஒப்படைக்கும் போது அதற்கான சாட்சிகளை ஏற்ப்படுத்திக் கொள்ளுங்கள்.கணக்கெடுப்பதில் அல்லாஹ் போதுமானவன். ( 04 – 06 )
மேலும் ”அநாதைகளின் சொத்துக்களை அழகிய முறையிலே தவிர நீங்கள் நெருங்காதீர்கள். ( 17 – 34 )
மேலும் அநாதைகளின் சொத்துக்களை அநியாயமாக சாப்பிடுவது பெரும் பாவங்களில் உள்ளதாகும் என்று நபியவர்கள் கூறினார்கள். (புகாரி)
இப்படி பல குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும், கடுமையாக எச்சரித்துக் கொண்டிருக்கின்றன.

அநாதை இல்லங்கள்

அநாதைகளை ஓரிடத்தில் வைத்து பராமறிப்பதற்காக உலக மட்டத்தில் காப்பகங்கள் நிறுவப்பட்டு பிள்ளைகளை பாதுகாத்து வருகிறார்கள். இந்த அநாதை பிள்ளைகளுக்காக உலக மட்டத்தில் தாராள மனம் படைத்த செல்வந்தர்கள் தனது செல்வங்களை வாரி வழங்குகிறார்கள். வரவேற்கக் கூடிய விடயம் தான். அவர்கள் நல்ல நோக்கத்திற்காக அள்ளி கொடுக்கிறார்கள். இருந்தாலும் ஓரிரு இடங்களில் அநாதைகளின் சொத்துக்கள் சூரையாடப் படுகிறன்றன. அநாதைகளின் அவல நிலைகளை படம் எடுத்துக் காட்டி பல இலட்சங்கள் மோசடி செய்யப் படுகின்றன. இவர்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ள வேண்டும்.
பதவியையும், அதிகாரத்தையும் பயன் படுத்தி யாரையும் இந்த உலகில் ஏமாற்றலாம். ஆனால் படைத்த ரப்பை யாரும் ஏமாற்ற முடியாது. மறுமை நாளில் சம்பந்தப் பட்டவர்கள் ஏமாந்து போவார்கள்.
எனவே உங்கள் தொழில்களில் அபிவிருத்தியை காண வேண்டுமா ? உங்கள் குடும்பத்திற்கு அல்லாஹ்வின் அருள் வளம் தேவையா ? அதற்கான சிறந்த ஒரே வழி அநாதைகளுக்கு தாராளமாக அள்ளிக் கொடுப்பதாகும்.

தொழும் பொது தோள்புஜம் மறைக்கப்பட வேண்டும்

நாம் தொழும் போது நம்மை ஆடையால் அலங்கரித்துக் கொள்ள வேண்டும். நாம் தொழுகையில் நிற்கும் போது நமது இறைவனுக்கு முன்னால் நிற்கிறோம் என்ற சிந்தனை வர வேண்டும் . படைத்தவனுக்கு முன்னால் நிற்கும் போது மிகவும் கண்ணியமான முறையில் நிற்க வேண்டும். குறிப்பாக தொழுகைக்கு செல்லும் போது அழகான ஆடையை அணிந்த நிலையில் பள்ளிக்குச் செல்ல வேண்டும்.
ஆரம்ப காலங்களில் கஃபாவை ஆடையின்றி நிர்வாணமாக வலம் வந்ததினால் தான் தவாபின் போது ஆடையை அணிந்து கொள்ளுங்கள் என்று அல்லாஹ்வின் கட்டளை வந்தது.
அதே போல ஆரம்ப காலங்களில் ஆடைப் பற்றாகுறை இருந்த நபியவர்களின் காலத்தில் அறைகுறை ஆடையுடன் தோழர்கள் தொழுதார்கள். அதன் பிறகு தொழும் போது இன்ன, இன்ன பகுதிகள் கட்டாயம் மறைக்கப்பட வேண்டும் என்று நபியவர்கள் வழிக் காட்டினார்கள்.
மறைக்கப்பட வேண்டிய பகுதிகளில் மிக முக்கியமான பகுதி தான் இரண்டு தோள்புஜங்களாகும்.என்பதை பின்வரும் ஹதீஸ்கள் தெளிவுப் படுத்துகின்றன.
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தம் தோள்களை மறைக்காமல் ஒரே ஆடையை அணிந்துகொண்டு தொழ வேண்டாம்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம் 894)
மேலும் “உமர் பின் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்முசலமா (ரலி) அவர்களது இல்லத்தில் ஒரே ஆடையை அணிந்துகொண்டு தொழுததை நான் பார்த்தேன். அந்த ஆடையின் இரு ஓரங்களையும் தம் தோள்கள்மீது (வலது தோள் மீதிருக்கும் ஓரத்தை இடது கைக்குக் கீழேயும் இடது தோள் மீதிருக்கும் ஓரத்தை வலது கைக்குக் கீழேயுமாக) மாற்றிப் போட்டுக்கொண்டு தொழுததை நான் பார்த்தேன். ( முஸ்லிம் 895 )
எனவே தொழும் போது கட்டாயம் தோள்புஜங்கள் மறைக்கப்பட வேண்டும் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். சில ஆண்கள் சிறிய டவல் போன்ற துண்டை தொழும் போது தன் தோள் மீது போட்டுக் கொண்டு தொழுகிறார்கள். வேறு ஆடையே இல்லை என்றால் பரவாயில்லை, ஆனால் பல ஆடைகளை அடுக்கி வைத்துக் கொண்டு கஞ்சத்தனமாக சிறிய துண்டை தோள் மீது போட்டுக் கொண்டு தொழுவது எந்த விதத்தில் நியாயமாகும். ? தொழுகை கூடுமா என்றால் தொழுகை கூடு்ம்.
என்றாலும் ஏன் தொழும் போது அலங்காரத்தை இறைவன் எடுக்க சொல்கிறான் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். எனவே பள்ளிக்கு செல்லும் போது அழகிய ஆடை அணிந்து வாசனை திரவியங்களை பூசிக் கொண்டு போகும் பழக்கத்தை அமைத்துக் கொள்ளுங்கள்.

இஸ்லாத்தின் பார்வையில் மகளிர் தினம்

ஆண்டு தோறும் மார்ச் 8 ஆம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த தினம் ஆரம்பிக்கப்பட்டு சுமார் 103 ஆண்டுகள் ஆகின்றன. இந்த தினத்தில் பல்வேறு மகளிர் அமைப்புகள் பெண்களுக்கான பல்வேறு கோரிக்கைகளையும், உரிமைகளையும், தங்களுக்கான சுதந்திரத்தையும் முன்வைத்து பதாகைகளோடும் துண்டுப் பிரசுரங்களோடும், ஆர்ப்பரிக்கும் கோஷங்களோடும் உலா வருவதைப் பார்க்கிறோம்.

இத்தகைய நிலைப்பாடுகள் பெண்களுக்கான முழு உரிமைகளையும் சுதநதிரங்களையும் பெற்றுத்தந்து விட்டனவா என்றால் இல்லை என்பது தான் பதிலாக இருக்கும்.
இந்த தினம் உருவாக்கப்பட்டதின் நோக்கம் என்ன? 18 ஆம் நூற்றாண்டில் பெண்கள் ஆரம்ப கல்வி கூட மறுக்கப்பட்டு வீடுகளிலேயே முடக்கி வைக்கப்பட்டிருந்தனர். வேலைகளில் பெண்களுக்கும் உரிமை வேண்டும் எனவும் ஆரம்ப கல்வி வேண்டும் எனவும் தங்களுக்கான உரிமைகள் தரப்படவும் வேண்டும் எனவும் ஆண்களுக்கு இணையான ஊதியம் தரப்படவும் வேண்டும் எனவும் 1857 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி அமெரிக்காவில் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். 1907 ஆம் ஆண்டு ஒரு போராட்டம் நடை பெற்றது.
ரஷ்யாவின் அலெக்ஸாண்டிரா கெலன்ரா என்பவர் தான் 1920 ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த போராட்டத்தின் போது மார்ச் 8 ஆம் தேதியை மகளிர் தினமாக அனுசரிக்கவேண்டும் என்று பிரகடனப்படுத்தினார். அன்றிலிருந்து இத்தினம் அனுசரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஆப்கானிஸ்தான், துருக்மெனிஸ்தான், தஜிகிஸ்தான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், அஜர்பைஜான், ரஷ்யா, கியூபா, வியட்நாம், கம்போடியா, உக்ரைன், ஆர்மேனியா, மங்கோலியா, மால் டோவா, புர்கினியாபெசோ, எரித்திரியா, பெலாரஸ், மான்டே நெக்ரோ இது போன்ற பல நாடுகளில் தற்போது இத்தினத்தில் விடுமுறை வழஙக்கப்படுகிறது.
அதே நேரத்தில் ஒரு காலத்தில் பெண் என்றால் பேய் என்றும், அவள் ஒரு ஜடப் பொருளே என்றும், அவளுக்கு ஆத்மா இருக்கிறதா இல்லையா? என்று பட்டிமன்றங்கள் நடத்துவதும், அவள் ஒரு போகப் பொருளைப் போன்றும், ஆண்களின் காமப் பசியைத் தீர்க்கவே படைக்கப்பட்டிருக்கிறாள் என்றும், அவளுக்கு தேவதாசி பட்டம் கட்டி கோயில்களில் விடப்பட்டு ஆண்களின் காமப் பசி தீர்க்கும் அபலைகளாகவும், அவளுக்கு எவ்வித உரிமைகளோ சுதந்திரங்களோ கிடையாது என்றும், கணவன் இறந்து விட்டால் வாழும் உரிமை மறுக்கப்பட்டு அவனோடு உடன்கட்டை ஏறி செத்து விட வேண்டும் என்றும், கல்வி கற்கும் உரிமை, ஆலயங்களுக்கு செல்லும் உரிமை, கணவனை தேர்ந்தெடுக்கும் உரிமை, சொத்துரிமை,வாரிசுரிமை, பிறக்கும் உரிமை போன்ற எவ்வித உரிமைகளுமற்றவளாவே இருக்கவேண்டும் என்றும், கருவிலே கொல்லப்படவேண்டும் என்றும், அப்படியே தப்பித் தவறி பிறந்துவிட்டாலும் கள்ளிப்பால், நெல்மணி கொடுத்து கொல்லப்படடுவிட வேண்டும் என்றும்…… இப்படி பெண்களுக்கெதிரான வன்கொடுமைகளெல்லாம் நடந்து கொண்டிருந்த காலகட்டம்.
இந்த இழி நிலைகளெல்லாம் மாற வேண்டும் என்பதற்காக கொண்டுவரப்பட்ட தினமே இந்த மகளிர் தினம்.
மேற்கூறப்பட்ட இழிநிலைகளெல்லாம் மாறியதா? அல்லது மாற்றப்பட்டதா எனில் பற்பல தொழில் நுட்ப சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நவீன விஞ்ஞான யுகத்தில் கூட பெண்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
பெண்களை வைத்து நிர்வாண ஆபாசப்படங்கள் எடுப்பது, விளம்பரங்களில் போகப் பொருளாகக் காட்டுவது, ஆண்களுக்கு முன்னால் அரைகுறை ஆடைகளுடன் உலா வர விடுவது, பாடல்களில், சினிமாக்களில் நாடகங்களில் கள்ளத் தொடர்பு கொள்வது போன்று தவறாக காட்டுவது, விபச்சாரத்தில் ஈடுபடுபவது போன்று காட்டுவது, பாடல்களில் பெண்களை கொச்சைப்படுத்தி பாடுவது, பள்ளி கல்லூரிகளில் தன் சக ஆண் நணபர்களாலும், வேலை பார்க்கிற இடங்களில் மேலதிகாரிகளாலும் பாலியல் தீண்டல்களுக்கு உள்ளாக்கப்படுவது போன்ற பெண்களுக்கெதிரான அத்தனை கொடுமைகளும் நவநாகரீக காலத்திலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
பெண்கள் அமைப்புகள், மாதர் சங்கங்கள் போன்ற பெண்களுக்காக பாடுபடுகிறோம் என்று சொல்லக்கூடிய அமைப்புகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன? இவைகளை கவனத்தில் கொண்டு இக்கொடுமைகளுக்கெதிராக கிளர்ந்தௌ வேண்டியது காலத்தின் கட்டாயம்.
ஆனால் இன்று பெண்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டுக் கொண்டிருக்கிற நிலையில் பெண்களுக்கான அத்துனை உரிமைகளையும் மனித படைப்பின் ஆரம்பத்திலேயே இஸ்லாம் வழங்கியருக்கிறது.
இஸ்லாம் வழங்கும் பெண்களுக்கான உரிமைகள்
பெண்களிடத்தில் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என்று பெண் விடுதலையின் முதற் சுதந்திரப்பிரகடனத்தை நபி (ஸல்)அவர்கள் விடுக்கிறார்கள்.
பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், பெண்கள் (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளனர். விலா எலும்பின் மிகக் கோணலான பகுதி அதன் மேல்பகுதியாகும். அதை நீ (பலவந்தமாக) நிமிர்த்திக் கொண்டே போனால் அதை நீ ஒடித்தே விடுவாய். அதை அப்படியே நீவிட்டுவிட்டால் கோணலுள்ளதாகவே அது நீடிக்கும். எனவே, பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்.
புகாரி: 5186 முஸ்லிம்,திர்மிதீ.
பிறக்கும் உரிமை மறுக்கப்பட்டுக் கொண்டிருந்த அஞ்ஞான கால கட்டத்தில் அவ்வுரிமையை வழங்கியது.
அவர்களில் ஒருவனுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாராயம் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகிறது – அவன் கோபமுடையவனாகிறான்.
எதைக் கொண்டு நன்மாராயம் கூறப்பட்டானோ (அதைத் தீயதாகக் கருதி) அந்தக் கெடுதிக்காக(த் தம்) சமூகத்தாரை விட்டும் ஒளிந்து கொள்கிறான் – அதை இழிவோடு வைத்துக் கொள்வதா? அல்லது அதை (உயிரோடு) மண்ணில் புதைத்து விடுவதா? (என்று குழம்புகிறான்), அவர்கள் (இவ்வாறெல்லாம்) தீர்மானிப்பது மிகவும் கெட்டதல்லவா?16:58,59
பெண் குழந்தை என்றாலே பாவம் கேவலம என்று நினைத்துக் கொலை செய்து கொண்டிருந்த அந்தக் காலகட்டத்தில் தான் நபியவர்கள் அதைத் தடுத்து நிறுத்தி
பெண் குழந்தையை பெற்று ஒழுக்கத்துடன் வளர்த்து திருமணமும் முடித்துக் கொடுத்தால் சொர்க்கம் என்றார்கள் நபியவர்கள்.
ஒருவருக்கு மூன்று பெண் குழந்தைகளோ அல்லது மூன்று சகோதரிகளோ இருந்து அவர்களிடம் நல்ல முறையில் நடந்து கொண்டால் அவர்கள் நரகத்திற்கு திரையாக இருப்பார்கள் அல்லது அவர் சொர்க்கம் செல்வார் என்றார்கள் நபியவர்கள்.அதபுல் முஃப்ரத்
சிசுக்கொலை கூடாது என்றும் அதற்கான தண்டனையை கண்டிப்பாக அனுப வித்தே ஆக வேண்டும் என்பதை இஸ்லாம் எச்சரிக்கிறது.
நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள், அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை(யும் வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் – அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாக மிகப் பெரும் பிழையாகும்.17:31
(பெற்றெடுத்த) தாய்மார்களுக்குத் துன்பம் தருவதையும், பெண் குழந்தைகளை உயிருடன் புதைப்பதையும் (நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ள பிற மனிதர்களின் உரிமைகளை) நிறைவேற்றாமலிருப் பதையும் பிறரின் செல்வத்தை (அநியாயமாக)அபகரித்துக் கொள்வதையும் தேவையற்ற வீண் பேச்சகள் பேசுவதையும் அதிகமாக கேள்விகள் கேட்பதையும், செல்வத்தை வீணாக்குவதையும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு ஹராமாக (விலக்கப்பட்டதாக) ஆக்கியுள்ளான். ‘என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”என முகீரா இப்னு ஷுஅபா(ரலி) அறிவித்தார்.
புகாரி:2408.5975,6473,7292 முஸ்லிம்,முஸ்னத் அஹ்மத்
பெண் சிசுக் கொலை பெரும்பாவம் என்கிறது இஸ்லாம்
நான் நபி (ஸல்) அவர்களிடம், ‘அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப் பெரியது எது?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க, அவனுக்கு நீ இணை கற்பிப்பது” என்று கூறினார்கள். நான், ‘நிச்சயமாக அது மிகப் பெரிய குற்றம் தான்” என்று சொல்லிவிட்டு, ‘பிறகு எது?’ என்று கேட்டேன். ‘உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என அஞ்சி அதனை நீ கொல்வது” என்று கூறினார்கள். நான், ‘பிறகு எது?’ என்று கேட்க, அவர்கள், ‘உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விசாரம் செய்வது” என்றுகூறினார்கள்.
புகாரி:4477,4761,6001,6811,6861,7520,7532.
முஸ்லிம்,அபூதாவூத், திர்மிதீ,நஸாயீ,முஸ்னத் அஹ்மத்.
பெண் குழந்தையை வாழ விடவேண்டும் அவள் இயற்கையாகவே மரணித்து விட்டாலும் சொர்க்கம் கிடைக்கும் என்கிறது இஸ்லாம்.இத்தகைய சிறப்பு வேறு எந்த மதத்திலும் காண முடியாது.
‘பருவ வயதை அடையாத மூன்று குழந்தைகளை (ஒரு பெண் பறிகொடுத்தால் அவளை நரகத்திலிருந்து காக்கும் திரையாக அக்குழந்தைகள் இருப்பார்கள்)’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என அபூ ஹுரைரா(ரலி) அவர்களின் வாயிலாக இடம் பெற்றுள்ளது. புகாரீ:102ஃ99.
ஒரு பெண்மணி தன்னுடைய இரண்டு பெண் குழந்தைகளுடன் யாசித்த வண்ணம் வந்தார். என்னிடம் அப்போது ஒரு பேரீச்சம் பழத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. எனவே, அதை அவரிடம் கொடுத்தேன். அவர் அதை இரண்டாகப் பங்கிட்டு இரண்டு குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டார். அவர் அதிலிருந்து சாப்பிடவில்லை. பிறகு அவர் எழுந்து சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நான் அவர்களிடம் இச்செய்தியைக் கூறியதும் அவர்கள், ‘இவ்வாறு பல பெண் குழந்தைகளால்
சோதிக்கப்படுகிறவருக்கு அக்குழந்தைகள் நரகத்திலிருந்து அவரைக் காக்கும் திரையாக ஆவார்கள்” எனக் கூறினார்கள் என ஆயிஷா (ரலி) அறிவித்தார்.
புகாரி: 1418, முஸ்லிம், திர்மிதீ, முஸ்னத் அஹ்மத்
உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் பெண்களை மதித்து அவர்களுக்கு வீட்டு உரிமையை வழங்கி அது சம்பந்தமாக விசாரிக்கப்படும் என்று இஸ்லாம் கூறுகிறது.
உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளாராவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே. தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண்மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிப்படுவான். பெண் (மனைவி), தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள், தன் எஜமானின் உடைமைகளுக்குப் பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.புகாரி: 2409.
கல்வி கற்கும் உரிமை
‘(நாங்கள் உங்களை அணுகி மார்க்க விளக்கங்களை கேட்க முடியாதவாறு) தங்களிடம் (எப்போதும்) ஆண்களே எங்களை மிகைத்து நிற்கிறார். எனவே, தாங்களாகவே எங்களுக்கென்று ஒரு நாளை ஏற்பாடு செய்யுங்கள்’ என்று பெண்கள் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டுக் கொண்டார்கள். அவர்களும் அப்பெண்களுக்கென ஒரு நாளை வாக்களித்து, அந்நாளில் அவர்களைச் சந்தித்து அவர்களுக்கு அறிவுரை பகர்ந்தார்கள். (மார்க்கக் கட்டளைகளை) ஏவினார்கள். அவர்கள் தங்களின் அறிவுரையில் ‘உங்களில் ஒரு பெண் தன் குழந்தைகளில் மூவரை (மரணத்தின் மூலம்) இழந்துவிட்டாள் என்றால் அந்தக் குழந்தைகள் அப்பெண்ணை நரகத்துக்குச் செல்லாமல் தடுத்துவிடக் கூடியவர்களாக இருப்பார்கள்’ என்று கூறினார்கள். அப்போது ஒரு பெண், ‘இரண்டு குழந்தைகளை ஒருத்தி இழந்துவிட்டால்?’ என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘இரண்டு, குழந்தைகளை ஒருத்தி இழந்துவிட்டாலும் தான்’ என்று கூறினார்கள்” அபூ ஸயீதுல் குத்ரி(ரலி) அறிவித்தார்.
புகாரி: 101ஃ99.
‘மூன்று மனிதர்களுக்கு (அல்லாஹ்விடம்) இரண்டு விதமான கூலிகள் உள்ளன.ஒருவர் வேதக்காரர்களில் உள்ளவர். இவர் தம் (சமூகத்திற்கு அனுப்பப்பட்ட) தூதரையும், முஹம்மதையும் நம்பியவர். மற்றொருவர் தம் இறைவனின் கடமைகளையும், தம் எஜமானுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் நிறைவேற்றும் அடிமை. மூன்றாமவர் தம்மிடத்திலுள்ள ஓர் அடிமைப் பெண்ணுக்கு ஒழுக்கப் பயிற்சி அளித்து, அந்தப் பயிற்சியை அழகுறச் செய்து, அவளுக்கு மார்க்கச் சட்டங்களைக் கற்பித்து, கற்றுத் தந்ததையும் அழகுறச் செய்து, பின்னர் அவளை அடிமைத்தளையிலிருந்து விடுவித்து அவளை மணந்தவர். இம்மூவருக்கும் இரண்டு விதக் கூலிகள் உண்டு’ என்று இறைத்தூதர் (ஸல்)அவர்கள் கூறினார்கள்” என அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார்
புகாரி:97ஃ95.
இஸ்லாத்தின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ளமுடியாத இஸ்லாத்தின் எதிரிகள் பல காலகட்டஙகளிலும் இருந்திருக் கிறார்கள்.அவர்கள் இஸ்லாத்தின் மீது பல்வேறு விதமான குற்றச்சாட்டுக்களை வைத்தபோதும்கூட அவைகளையெல்லாம் தகர்த்தெறிந்து இஸ்லாம் நாளொரு மேனியும் பொழுதொருவண்ணமுமாக வளர்நது கொண்டு தான் இருக்கிறது.
அவர்களின் குற்றச்சாட்டுக்களில் இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகிறது.அவர்களுக்கு எவ்வித உரிமைகளும் கிடையாது.அவர்களை பர்தா என்ற சிறையில் அடைத்திருக்கிறது என்பது.
இஸ்லாம் அவர்களுக்கு வழங்கியிருக்கிற விஷயங்களை கவனிக்கும் போது இவர்கள் வைக்கிற குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்யான குற்றச்சாட்டுக்கள் என்பதும் இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுக்கவே என்பதும் விளங்குகிறது.
அன்னை ஆயிஷா (ரலி), உம்மு ஹபீபா (ரலி), உம்மு மைமூனா (ரலி), அன்னை ஹஃப்ஸா (ரலி), உம்மு சலமா (ரலி), உம்மு தர்தா (ரலி), போன்ற நபி காலத்தில் வாழ்ந்த ஸஹாபியப் பெண்கள் குர்ஆனிலும் நபிமொழிக் கலையிலும் சிறந்து விளங்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் உமர் என்று சொல்லப்படக்கூடிய கலீஃபா உமர் இப்னு அப்துல் அஜீஸ் என்பவர் நபிமொழிக் கலையில் வல்லுநராக விளங்கிய அம்ரா பின்த் அப்திர்தரஹ்மான் என்பவரிடம் நபிமொழிகளைக் கற்றுக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் இஸ்லாமியப் பெண்களுக்கு கல்வி கற்க பர்தா என்றைக்குமே தடையாக இருந்ததில்லை என்பது விளங்குகிறது.
உம்மு தர்தா என்ற ஸஹாபியப் பெண்மணியிடம் தான் கலீஃபா அப்துல் மலிக் இப்னு மர்வான் கல்வி பயின்றிருக்கிறார்.
பாத்திமா அல்ஃபிஹ்ரி அவரின் சகோதரி மர்யம் கி.பி.859 ஆம் ஆண்டு மொராக்கோவில் உலகின் முதன்முதலில் ஒரு கல்வி நிறுவனத்தை நிறுவி அதில் மார்க்கக் கல்வியோடு வானவியல் புவியியல்,மருத்துவம் என அனைத்துக் கல்வியும் கற்றுக் கொடுக்கப்பட்டு சான்றிதழுடன் கூடிய பட்டப்படிப்புகளை வழங்கி இன்றும் அது அல்காராவின் பல்கலைக்கழகம் என்ற பெயருடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
நாம் வாழுகிற இந்த நூற்றாண்டில் கூட தென்னாப்பிரிக்காவைச் சார்ந்த கதீஜா ஹப்பாஜு, கனடாவின் தலைசிறந்த கல்வியாளர் ஷாஹினா சித்தீகி,மாபொரும் பெண் அறிஞர் மர்யம் ஜமீலா,எகிப்தின் ஜைனப் கஸ்ஸாலி,அமெரிக்காவின் லூயி லாமா அல்ஃபருக்கீ போன்ற இஸ்லாமிய பெண் கல்வியாளர்கள் உருவாகியிருக்கிறார்கள் என்றால் இது இஸ்லாம் அவர்களுக்கு வழங்கியிருக்கிற உரிமைகளின் அடையாளங்களாகும் என்பதை இஸ்லாத்திற் கெதிராக குற்றச்சாட்டுக்களை வைப்பவர்கள் விளங்கிக் கொள்ளவேண்டும்.
பெண்களுக்கு மதிப்பளித்து உபதேசம் செய்திருக்கிறார்கள்.
‘பெண்களுக்கு (தம் உரையைக்) கேட்க வைக்க முடியவில்லை என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கருதி, பிலால்(ரலி) அவர்களுடன் பெண்கள் பகுதிக்குச் சென்றார்கள். அங்கு அவர்களுக்கு அறிவுரை கூறிவிட்டு அவர்களிடம் தர்மம் செய்யும்படி ஏவினார்கள். உடனே பெண்கள் தம் காதணிகளையும், மோதிரத்தையும் கழற்றிப் போட ஆரம்பித்தார்கள். பிலால்(ரலி) தம் ஆடையி(ன் ஒரு புறத்தை விரித்து அதி)ல் அவற்றைப் பெற்றுக் கொண்டே சென்றார்கள்” இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். புகாரி 98ஃ96.
தன் பொருப்பாளரின் துணையோடு தன் வருங்காலக் கணவனை தேர்ந்தெடுக்கும் உரிமை.
தந்தையோ, மற்ற காப்பாளரோ கன்னிப்பெண்ணிற்கோ, கன்னி கழிந்த பெண்ணிற்கோஅவர்களின் விருப்பமில்லாமல் மணமுடித்து வைக்கக் கூடாது.
நபி(ஸல்) அவர்கள், ‘கன்னிகழிந்த பெண்ணை, அவளுடைய (வெளிப்படையான)உத்தரவு பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம். கன்னிப் பெண்ணிடம் (ஏதேனும் ஒருமுறையில்) அனுமதி பெறாமல் மணமுடித்துக் கொடுக்கவேண்டாம்” என்று கூறினார்கள். மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! எப்படி கன்னியின் அனுமதி(யைத் தெரிந்து கொள்வது)” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘அவள் மௌனம் சாதிப்பதே (அவளுடைய சம்மதம்) என்று கூறினார்கள்
புகாரி: 5136.
ஒரு பெண்மணி நபியிடம் வந்து என் தந்தை எனக்கு விருப்பமில்லாத ஒருவருக்கு என்னை திருமணம் முடித்துக் கொடுதத்துவிட்டார்கள் என்று சொன்னபோது நீ அவரை விவாகரத்து செய்து விடலாம் என்று நபியவர்கள் கூற இல்லை அல்லாஹ்வின் தூதரே பெண்களுக்கு கணவனை தேர்ந்தெடுக்கும் உரிமை இருக்கிறதா இல்லையா என்பதற்கு தான் நான் இவ்வாறு கேட்டேன் என்று அப்பெண்மணி கூறுகிறார்கள்.ஹதீஸின் கருத்து.
விவாகரத்து பெற்று விட்டாலோ கணவன் இறந்து விட்டாலோ மறுமணம் புரியும் உரிமை
நீங்கள் (உங்களுடைய) துணைவியரை விவாகரத்துச் செய்து அவர்கள் தங்களின் (இத்தா) தவணையின் இறுதியை அடைந்தால், அவர்கள் தங்களுக்குரிய துணைவர்களை முறையோடும் மனம் ஒப்பியும் மணந்துகொள்வதை (காப்பாளர்களே!) நீங்கள் தடுக்கவேண்டாம்! (திருக்குர்ஆன் 02:232)
வழிபாட்டுத்தலங்களுக்கு செல்லும் உரிமை
நபியவர்கள் காலத்திலும் சரி தற்காலத்திலும் சரி பெண்கள் இறையில்லங்களுக்கு வந்து வழிபாடுகள் செய்ய இஸ்லாம் அனுமதி வழங்கியருக்கிறது.
‘நபி(ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையைத் தொழுவார்கள். இறைநம்பிக்கையுள்ள பெண்கள் ஆடைகளால் தங்களின் உடல் முழுவதையும் சுற்றி மறைத்தவர்களாக அவர்களுடன் தொழுவார்கள். பின்னர் தங்களின் வீடுகளுக்குச் செல்வார்கள். அவர்கள் யார் யார் என்பதை (வெளிச்சமின்மையால்) யாரும் அறியமாட்டார்கள்” என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.புகாரி: 372.
தஸ்பீஹ் கூறுதல் ஆண்களுக்குரியதும் கைதட்டுதல் பெண்களுக்குரியதாகும். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்தார்.
புகாரி:1203,1204, முஸ்லிம்,நஸாயீ,திர்மிதீ,முஸ்னத் அஹ்மத்,அபூதாவூத்.
பள்ளிவாயில்களுக்கு செல்ல உங்கள் பெண்கள் (மனைவியர்)அனுமதி கேட்டால் தடுக்காதீர்கள்(அனுமதி கொடுங்கள்) என்றும் மற்றொரு நபிமொழியில் என்றாலும் வீடுகளே அவர்களுக்குச் சிறந்தது என்றார்கள் நபியவர்கள்.
முஸ்லிம்,அபூதாவூத்,முஸ்னத் அஹ்மத்.
கருத்துச் சொல்லும் உரிமை
ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு ஹுதைபிய்யா என்ற இடத்தில் வைத்து நபியவர்களுக்கும் குறைஷிகளுக்கும் ஒரு உடன்படிக்கை நடைபெறுகிறது.
நபி (ஸல்) அவர்கள் ஒப்பந்தப் பத்திரத்தை முடித்தவுடன் தங்களது தோழர்களிடம் எழுந்து சென்று ‘குர்பானி பிராணியை அறுத்து பலியிடுங்கள்’ என்றார்கள். ஆனால், அவர்களில் ஒருவர் கூட அதற்கு முன் வரவில்லை. நபி (ஸல்) மூன்று முறை கூறியும் எவரும் எழுந்து செல்லவில்லை. ஆகவே, நபி (ஸல்) தனது மனைவி உம்மு ஸலமாவிடம் சென்று மக்கள் நடந்து கொண்டதைக் கூறினார்கள். உம்மு ஸலமா (ரழி) ‘அல்லாஹ்வின் தூதரே! மக்கள் குர்பானியை நிறைவேற்ற வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுகிறீர்களா? நீங்கள் சென்று யாரிடமும் பேசாமல் உங்களது ஒட்டகத்தை அறுத்து விட்டு, தலைமுடி இறக்குபவரை அழைத்து உங்களது தலைக்கு மொட்டை அடித்துக் கொள்ளுங்கள்’ என்றார்கள். நபியவர்கள் தனது மனைவி கூறியவாறே எழுந்து சென்று யாரிடமும் பேசாமல் தனது ஒட்டகத்தை அறுத்து விட்டு, தலைமுடி இறக்குபவரை அழைத்து மொட்டை அடித்துக் கொண்டார்கள். இதைப் பார்த்த மக்கள் எழுந்து தங்களது குர்பானி பிராணிகளை அறுத்துவிட்டு ஒருவர் மற்றவருக்கு மொட்டையிட ஆரம்பித்தார்கள்.ஸீரா இப்னு ஹிஷாம்,அர்ரஹீக் அல்மக்தூம்.
பெண்களிடம் வரதட்சணைப் பிச்சை வாங்குகிற முதுகெலும்பில்லாத கோழை ஆண் வர்க்கத்தினருக்கு சாட்டையடியாக அவர்களுக்குமணக்கொடை வழங்கவேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.
நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக் கொடை)களை மகிழ்வோடு (கொடையாகக்) கொடுத்து விடுங்கள் – அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்கு கொடுத்தால் அதைத் தாராளமாக மகிழ்வுடன் புசியுங்கள். 4:4
சொத்துரிமை
உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்கு போன்றது கிடைக்கும் என்று அல்ல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான், பெண்கள் மட்டும் இருந்து அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு இறந்து போனவர் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால் ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும், இறந்தவருக்கு குழந்தை இருக்குமானால் இறந்தவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம்(அவரது) பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் இறந்தவருக்கு குழந்தை இல்லாதிருந்து பெற்றோர் மாத்திரமே வாரிசாக இருந்தால் அவர் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (மீதி தந்தைக்கு உரியதாகும்): இறந்தவருக்கு சகோதரர்கள் இருந்தால் அவர் தாய்க்கு ஆறில் ஒரு பாகம் தான் (மீதி தந்தைக்குச் சேரும்) 4:11
கேள்வி கேட்டு உரிமைகளை பெற்றுக் கொள்ளும் உரிமை
அஸ்மா பின்த் யஸீத் என்ற பெண்மணி நபியவர்களிடம் வந்து என் தாயும் தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்,நான் ஒட்டுமொத்த பெண்கள் சார்பாக வந்திருக்கிறேன்.சத்தியத்தைக் கொண்டு அல்லாஹ் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நபியாக உங்களை அனுப்பியருக்கிறான்.நாங்கள் உங்களையும் உங்களை அனுப்பிய உங்கள் இறைவனையும் நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.நாங்கள் பெண்கள் கூட்டம்,குறைவான எண்ணிக்கையில் படைக்கப்பட்டிருக்கிறோம். உங்களுடைய வீட்டின் அடித்தளமே நாங்கள் தான், உங்களின் இச்சைகளை தீர்க்கும் உங்களின் குழந்தைகளை சுமக்கும் பெண்களாக இருக்கிறோம்.நீங்களோ ஜும்ஆ, கூட்டுத் தொழுகை, நோயாளிகளை நலம் விசாரித்தல், ஜனாஸாவில் கலந்துகொள்ளுதல், ஹஜ்ஜிற்கு பிறகு ஹஜ் செய்தல் இவையெல்லாவற்றையும் விட சிறந்த காரியமாக இருக்கிற அல்லாஹ்வின் பாதையில் போர்புரிவது போன்ற காரியங்களில் ஈடுபட்டு நன்மைகள்pல் எங்களை விட முந்தி விடுகிறீர்கள்.
நீங்கள் ஹஜ்ஜிற்கோ உம்ராவிற்கோ சென்று விட்டால் உங்களின் கற்பை பாதுகாக்கிறோம், உங்களின் செல்வங்களை பாதுகாக்கிறோம், உங்களின் ஆடைகளை சுத்தப்படுத்துகிறோம், உங்களின் குழந்தைகளை நல்ல முறையில் வார்த்தெடுக்கிறோம். ஆனால் நன்மைகளில் உங்களோடு கூட்டாக வழி இல்லையா அல்லாஹ்வின் தூதரே? என்று ஒட்டுமொத்த பெண்களின் ஆதங்கத்தைக் கொட்டிவிடுகிறார்கள்.
உடனே நபியவர்கள் தங்களின் தோழர்களிடம் திரும்பி இது போன்ற மார்க்க விஷயத்தில் அழகான கேள்வியைக் கேட்ட ஒரு பெண்ணை நீங்கள் கண்டதுண்டா? என்று வினவ அதற்கு நபித்தோழர்கள் இல்லை என்று சொல்கிறார்கள்.
பெண்ணே நீ திரும்பிச் சென்று ஒட்டு மொத்த பெண்களுக்கும் தெரிவித்து விடு.
பத்தினித் தனமாக இருக்கவேண்டும், கணவனின் இறை கட்டளைகளுக்கு கீழ்ப்படிய வேண்டும், கணவனின் அன்பைப் பெற முயற்ச்சிக்க வேணடும் அவையெல்லாவற்றிற்கும் இவை ஈடாகிவிடும்(இவைகளைச் செய்தால் மேற்கூறப்பட்ட ஆண்கள் செய்கிற அமல்களுக்கு கூலி கடைப்பது போல் உங்களுக்கும் கூலி கிடைக்கும்); என்றார்கள் நபியவர்கள். ஷுஅபுல் ஈமான், மஃரிஃபதுஸ் ஸஹாபா.
இஸ்லாமியப் பண்டிகைகளின் போது பண்டிகை கொண்டாடுவதற்கான உரிமை.
‘கன்னிப் பெண்களும் மாதவிடாய்ப் பெண்களும் (பெருந்hளன்று) வெளியே சென்று நன்மையான காரியங்களிலும் முஸ்லிம்களின் பிரச்சாரத்திலும் பங்கு கொள்வார்கள். பெருந்hள் தொழுகை நடக்கும் இடத்திற்குச் செல்லும் மாதவிடாய்ப் பெண்கள் தொழும் இடத்தைவிட்டு ஒதுங்கி இருப்பார்கள்’ என்றும் உம்மு அதிய்யா(ரலி) கூறினார். இதைக் கேட்ட நான் மாதவிடாய்ப் பெண்களுமா? எனக் கேட்டதற்கு, ‘மாதவிடாய்ப் பெண் அரஃபாவிலும் மற்ற (மினா முஸ்தலிஃபா போன்ற) இடங்களுக்கும் செல்வதில்லையா?’என்று உம்மு அதிய்யா(ரலி) கேட்டார்” என ஹஃப்ஸா அறிவித்தார்.
புகாரி:824 முஸ்லிம்,நஸாயீ,முஸ்னத் அஹ்மத்
நன்மைகளை ஏவி தீமைகளைத் தடுக்கிற அழைப்புப் பணிகளில் ஈடுபடுகிற உரிமை
முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர், அவர்கள் நல்லதைச் செய்யத் தூண்டுகிறார்கள், தீயதை விட்டும் விலக்குகிறார்கள், தொழுகையைக் கடைப்பிடிக்கிறார்கள், (ஏழைவரியாகிய) ஜகாத்தை (முறையாக)க் கொடுத்து வருகிறார்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப் படுகிறார்கள், அவர்களுக்கு அல்ல்லாஹ் சீக்கிரத்தில் கருணை புரிவான் – நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். 9:71
கணவனை இழந்த தலாக் விடப்பட்ட பெண் தன் தேவைக்காக வருமானம் வெளியில் செல்வது போன்ற உரிமை.
ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி)சொல்கிறார்கள். என்னுடைய சிறிய தாய் தலாக் விடப்பட்டார்.அவர் தன் தேவைக்காக பேரீச்சை தோட்டத்திற்கு சென்று பழம் பறிக்க நினைத்த போது ஒரு மனிதர் அவர்களைத் தடுத்தார். என் சின்னம்மா நபியவர்களிடம் விவரத்தைக் கூற நீ சென்று உன் பேரீச்சை மரத்தில் பழங்களைப் பறித்துக் கொள்.அவற்றை நீ தர்மம் செய்யலாம், அல்லது நல்ல முறையில் பயன்படுத்தலாம் என்றார்கள்.
முஸ்லிம், நஸாயீ, அபூதாவூத், முஸ்னத் அஹ்மத்.
ஆக இஸ்லாத்தின் வரம்புகளோடு இவ்வனைத்து உரிமைகளையும் பயன்படுத்திக் கொள்ள இஸ்லாம் வலியுறுத்துகிறது.
பெண்கள் தினத்தில் மட்டும் பெண்களுக்கான உரிமைகளை முழங்குவதை விட்டுவிட்டு எல்லா நேரங்களிலும், காலங்களிலும் இஸ்லாம் வழங்கிய உரிமைகளை பெண்கள் பெற வேண்டும் அதற்கு இஸ்லாத்தை தங்களின் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொள்ளவேண்டும். அது ஒன்று மட்டுமே பெண்கள் உரிமைக்கான,விடுதலைக்கான, சுதந்திரத்திற்கான வழியாக இருக்கும்.
ஆக்கம்:
ஹாஜா முஹிய்யுத்தீன் ஃபிர்தௌஸி
ஆசிரியர்: அல்ஜாமியதுல் ஃபிர்தௌஸியா அரபிக்கல்லூரி, கோட்டார், நாகர்கோவில்.
தொடர்புக்கு: +919894896579

தவ்ஹீத் பெயரால் இஸ்லாமிய அகீதா-விற்கு அச்சுறுத்தல்

மௌலவி S.H.M. இஸ்மாயில் ஸலஃபி
தவ்ஹீத் வாதிகளுக்கு சோதனைகளில் மிக பெரிய சோதனையாக தவ்ஹீத் வாதிகள் என்ற பெயரில் இஸ்லாமிய அடிப்படைகளை தகர்தெரியும் செயல் செய்யக்கூடியவர்கள் மூலம்தான்.
இஸ்லாமிய அடிப்படை (ஈமான்) நம்பிக்கையான அல்லாஹ்வை நம்புவது, அவனது மலக்குமார்களை நம்புவது, அவன் இறக்கிய வேதங்களை நம்புவது, அவனது தூதர்களை நம்புவது, மறுமை நாளை நம்புவது மற்றும் கலா வல் கத்ர் இந்த ஆறு விஷயங்கள்தான்.
இந்த ஆறு விஷயங்களில் 5 விடயங்களில் சந்தேகத்தை ஏற்படுத்த கூடியவர்கள் அதுவும் தவ்ஹீத் பெயரால் உள்ளவர்கள் என்றால் ஆச்சரியமாக இருக்கின்றது. இவர்களை நேசிக்கமுடியுமா? இந்த 5 விஷயங்களில் பீஜே எவ்வாறெல்லாம் சந்ததேகக்தை ஏற்படுத்துகின்றார் என்பதனை அறிய இந்த வீடியோவை பார்வையிடவும்.
குர்ஆன் இறைவனின் வார்த்தைகள் அதில் இலக்கணப் பிழைகள் உள்ளனவா? குர்ஆன் விமர்சனம் செய்ய கூடியவரை நேசிக்க முடியுமா?
குர்ஆனில் எழுத்துப்பிழைகள் உள்ளனவா? ஸஹாபாக்கள் கவனகுறைவாக எழுதும்போது பிழையாக எழுதினார்களா?
தஜ்வீத் குறியீடுகள் – குர்ஆனில் சேர்க்கப்பட்ட எழுத்துக்களா?
கவாரிஜ்கள், முஃதஸிலாக்கள் நிராகரித்தலுக்கும் பீஜே நிராகரிப்புக்கும் உள்ள ஒற்றுமை என்ன?
விஞ்ஞானம் அறிவியில் உண்மைக்கு மாற்றமாக ஹதீஸ்கள் உள்ளனவா? சூரியன் மறையும் ஹதீஸ் அறிவியல் உண்மைக்கு மாற்றமானதா?
கண்ணுறு (கண்ணேறு) ஹதீஸை மறுக்க சினிமா நடிகைதான் ஆதாராமா?
மலக்குமார்கள் பற்றிய நம்பிக்கை (ஈமானில்) சந்தேகம் ஏற்படுத்துல்! – மனிதப் படைப்பு சம்மந்தமாக அல்லாஹ்விடம் ஆட்சேபனை செய்தார்களா?
மலக்குமார்கள் அனைவரும் ஷைத்தானுடன் சேர்ந்துகொண்டு இறைவனுக்கு மாறுசெய்தார்களா?
தாவூத் (அலை) அவர்கள் பொதுமக்கள் சொத்தை அபகரித்தாரா? (தர்ஜுமா 15-வது வெளியீட்டில் என்னவாக மாற்றப்பட்டுள்ளது)
நபி (ஸல்) அவர்கள் நபி ஆன பிறகு குறிப்பிட்ட காலம் சிறிய இணைவைப்பில் இருந்தார்களா?
நபிமார்கள் பற்றிய நம்பிக்கை (ஈமானில்) சந்தேகம் ஏற்படுத்துல்!
அல்லாஹ்வின் மீது உள்ள நம்பிக்கையில் (ஈமானில்) சந்தேகம் ஏற்படுத்துதல்! (அர்ஷில் மீதுள்ளான் என்ற செய்தியை வைத்து)
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கவாரிஜ்கள் மத்தியில் கூறிய வார்த்தை பீஜே-ஜமாத்திற்கு எப்படி பொறுந்தியுள்ளது!
ஸஹாபாக்களுக்குள்ள மார்க்க அங்கீகாரம் பீஜேவிற்கும் தத-ஜமாத்திற்க்கும் உண்டா?
நபிமார்கள் பற்றி நம்பிக்கையை உமர் (ரழி) அறியாமல் இருந்தார்களா?
நபி (ஸல்) அவர்கள் நேர்வழிபெற்ற கலிபாக்களின் ஆட்சியை விமர்சனம் செய்யலாமா?
உஸ்மான் (ரழி) மாமன் மச்சான்-மார்களுக்கு பதவி கொடுத்தார்களா? உண்மைநிலை என்ன?
கவாரிஜ்கள் உஸ்மான் (ரழி) மீது வைத்த குற்றசாட்க்கும் பீஜே உஸ்மான் (ரழி) மீது வைக்கும் குற்றசாட்டுகளுக்கும் உள்ள ஒற்றுமைகள் என்ன?
உஸ்மான் (ரழி) ஆட்சிக்கு (பதவிக்கு) வருமுன் உள்ள அவரது பொருளாதார நிலையும் பதவிக்கு வந்தபின் உள்ள பொருளதார நிலை என்ன?
உஸ்மான் (ரழி) ஆட்சிக்கு (பதவிக்கு) வருமுன் எத்தனை ஒட்டகம் வைத்திருந்தார்கள் பதவிக்கு வந்தபின் இருந்த ஓட்டகம் எத்தனை?
உஸ்மான் (ரழி) உறவினர்களுக்கு அரசு சொத்தை தானமாக கொடுத்தாரா? தனது சொந்த சொத்தை கொடுத்தாரா?
உஸ்மான் (ரழி) ஆட்சிக்கு (பதவிக்கு) வருமுன் மிக பெரிய செல்வந்தர் பதவிக்கு வந்தபின் எப்படியிருந்தார்?
இப்படி விமர்சனம் செய்யும் பீஜே-யின் பொருளாதார நிலை என்ன?
அல்லாஹ்-வின் தூதர் சிலாகித்த ஸஹாபாக்களை கேவலப்படுத்த கூடியவர்களை நேசிக்கலாமா?
அபூபக்கர் (ரழி) உமர் (ரழி) உஸ்மான் (ரழி) நரகம் போவார்கள் என நம்புவர்களை நேசிக்கலாமா?
ஜமாஅத் அன்ஸாரிஸ் சுன்னதில் முஹம்மதிய்யா (JASM) வழங்கும் ஒருநாள் இஸ்லாமிய மாநாடு
இடம்: ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆ பள்ளிவாசலில் – பறகஹதெனிய
நாள்: 06-02-2016
தலைப்பு: தவ்ஹீத் பெயரால் இஸ்லாமிய அகீதா-விற்கு அச்சுறுத்தல்
S. H. M. இஸ்மாயில் ஸலபி
(ஆசிரியர், உண்மை உதயம்)
பேராசிரியர், தாருத் தவ்ஹீத் அஸ்ஸலபிய்யா கலாபீடம்
வீடியோ: JASM Media

Zam Zam Water


The Well of Zamzam (or the Zamzam Well, or just ZamzamArabicزمزم‎) is a well located within the Masjid al-Haram in MeccaSaudi Arabia, 20 m (66 ft) east of the Kaaba, the holiest place in Islam. According to Islamic belief, it is a miraculously generated source of water from Allah, which began thousands of years ago when Abraham‘s (Ibrāhīm) infant son Ishmael (ʼIsmāʻīl) was thirsty and kept crying for water. Millions of pilgrims visit the well each year while performing the Hajj or Umrah pilgrimages, in order to drink its water.

Zamzam water and potential health risks

The British Food Standards Agency has in the past issued warnings about water claiming to be from the Zamzam Well containing dangerous levels of arsenic;[10][dead link]such sales have also been reported in the United Arab Emirates (UAE), where it is illegal to sell Zamzam water. The Saudi government has prohibited the commercial export of Zamzam water from the kingdom. In May 2011, a BBC London investigation found that water taken from taps connected to the Zamzam Well contained high levels of nitrate, potentially harmful bacteria, and arsenic at levels three times the legal limit in the UK, the same levels found in illegal water purchased in the UK.Arsenic is acarcinogen, raising concerns that Muslims who regularly consume commercial Zamzam water in large quantities may be exposed to higher risks of cancer.
Later in that month the Council of British Hajjis stated that drinking Zamzam water was safe and disagreed with the BBC report. They also went on to point out that the Government of Saudi Arabia does not allow the export of Zamzam water for resale. Also stating that it was unknown if the water being sold in the UK was genuine, people should not buy it and report the sellers to the Trading Standards.
The BBC’s findings have drawn mixed reactions from the Muslim community.Environmental health officer Dr Yunes Ramadan Teinaz told the British broadcaster about commercially marketed Zamzam water that, “People see this water as a holy water. They find it difficult to accept that it is contaminated, but the authorities in Saudi Arabia or in the U.K. must take action. The Saudi authorities have stated that water from the well was tested by the Group Laboratories of CARSO-LSEHL in Lyon, licensed by the French Ministry of Health for the testing of drinking water. According to reports of these results, the level of arsenic in Zamzam water taken at its source is much lower than the maximum amount permitted by the World Health Organization. The Saudi authorities have thus said that the water is fit for human consumption. Zuhair Nawab, president of the Saudi Geological Survey (SGS), has claimed that the Zamzam Well is tested on a daily basis, in a process involving the taking of three samples from the well. These are said to be examined in the King Abdullah Zamzam Water Distribution Center in Mecca, which is equipped with advanced facilities.